சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சர் கௌரவ பேராசிரியர் ருவன் ரணசிங்க, 2024 ஆம் ஆண்டு அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
பேராசிரியர் ரணசிங்க, தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டு, பதுளை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராவார். தொழில்வாண்மைமிக்க கல்வியாளரான அவர், சுற்றுலாத்துறைக் கற்கைநெறிகள் மற்றும் உயர்கல்வித் துறைக்கு பரந்தளவிலான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
சுற்றுலாத்துறை முகாமைத்துவத்தில் தத்துவவியல் முனைவர் பட்டம் (PhD) பெற்றுள்ள அவர், பேராசிரியரொருவராவும், ஆராய்ச்சியாளரொருவராகவும் அரசாங்கத்தில் தனது கல்விசார் நிபுணத்துவம் மற்றும் நடைமுறை நுண்ணறிவு ஆகியவை மூலமான பங்களிப்பையும் வழங்குகிறார்.


